Saturday, 29 August 2015

அன்பினால் பிரளயத்தையும் ஏற்படுத்தமுடியும் என்பதை புரிந்துக் கொண்டீர்கள் என்றால் அமைதியுறுவீர்கள் -உளறல் சுவாமி
-------------------------------------------------------------------------------
துளைகளால் உருவானதுதான் வலை . வெளியேற வழியுண்டு என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் - உளறல் சுவாமி

----------------------------------------------------------
கண்ணீரின் பலம்தெரியாமல் யாரிடமும் வீணாக்காதீர் . சிந்தும் ஒவ்வொரு துளியும் உன் எதிர்காலத்தை வலிமையாக்கும் என்பதை மறக்காதீர் -உளறல் சுவாமி
--------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு துளி நீரிலும் பெருவனம் இருப்பதை அறிந்துக் கொள்ளுங்கள் உலகை ரசிப்பவர் ஆவீர்கள் - உளறல் சுவாமி
----------------------------------------------------------------------------------------

நீரென்பது உண்மை வடிவமென்பது பொய் தோற்றங்களை நம்புவதை விடுங்கள் உண்மையை அறியலாம் - உளறல் சுவாமி
------------------------------------------------------------------------------------------
கடந்தவைகளை திரும்ப பெற நினைப்பவன் முட்டாள் - நான் முட்டாள்
-உளறல் சுவாமி
----------------------------------------------------------------------------------------

எந்தன் பயணம் தீர்வதில்லை....

சில நேரங்களில் தேவைகளால் எடுக்கப்படும் தீர்மானம் நம்மைத் தின்று விடுகிறது .

தனித்து விடபட்டவனிடமிருந்து எதை கேட்பாய்
நினைவுகளைத் தவிர -கட்

---------------------------------

அன்பினால் அறியப்பட்டேன்
அன்பினால் அறையப்பட்டேன்
அன்பினால் நிறைக்கப் பட்டேன்
அன்பினால் நிராகரிக்கப் பட்டேன்
அன்பினால் சூழப்பட்டேன்
அன்பினால் சூறையாடப்பட்டேன்
அன்பினால் எழுப்பப் பட்டேன்
அன்பினால் எறியப்பட்டேன்
அன்பினால் மகிழ்விக்கப் பட்டேன்
அன்பினால் இதோ மரணித்தும் விட்டேன்
அன்பே ...அன்பே ..... எங்கும் நிறைத்தாய்
என்னைமட்டும் ஏன் நீத்தாய்
-------------------------------------------------
நிரந்தரமற்ற இந்த உலகில்
உன்னைத் தேடுவதை விட்டுவிட்டேன்
இனி நான் தொலைந்தனாவேன்
--------------------------------------------------
காதலெனும் கோப்பையில்
எனை நிரப்பிகொள்கிறேன்
பருகிவிடு நீ
உயிரற்றுப் போகிறேன்
---------------------------
நீ வருவாயென ஒவ்வொரு கணத்தையும்
பருகிக் கொண்டிருக்கிறேன்
இந்த காலம் என்னை விழுங்குமுன்னே
வந்திடுவாயென காத்திருக்கிறேன்
------------------------------------------------------
மறந்துப் போகும் கனவுகளில்
எப்போதும் நீயிருக்கிறாய்
-----------------------------------------------
வெட்கம் மறந்த கண்களில்
என்னை புதைத்துச் செல்கிறாய்
திமிர்தெறிக்க புணர்ந்து தீர்க்கிறேன்
உனது வெட்கங்களை
----------------------------------------------------
உளியெடுப்பவன் நாத்திகம் பேசினால் என்ன சொல்வான் ?
கல்லைச் சிதைக்கிறேன் என்றா ? 
-----------------.....................................................................................
பிரிவில்லாத யாரிடமும்
அன்பு முழுமையாக இருப்பதில்லை
பிரிவுகள் தேவையானது
-----------------------------
யாரழுகையிலும் நிறமற்றதாகவே இருக்கும் கண்ணீர் - புரிவாய் பின் பொழுதுகளில்
----------------------------------------
அன்பென்றால் என்னவென்றுத் தெரியாமல் இருக்கலாம்
கண்ணீர்த் தெரியும்
அதன் வலி புரியும் ,வேதனை புரியும்
விட்டுச் செல்லும் துயரங்கள் தெரியும்
அன்பை உணரதவனிடம் நீங்கள் கண்ணீரை மட்டும்
எதிர்பார்ப்பது நியாயமா ? விட்டுச் சென்றுவிடுங்கள்
நான் ஒரு பயணியாகவே இருக்க விரும்புகிறேன்
கடந்தவை யாவும் எனை கடந்ததகவே இருக்கட்டும்
எந்தன் பயணம் தீர்வதில்லை
ஒரு போதும்
------------------------------------------
சலனமற்ற பொழுதுகளில் எழுதித் தீர்க்கிறேன்
எந்தன் துயரங்களை உன் நினைவுகளில்

Saturday, 18 April 2015

என் பொழுதுகளைக் களவாடியே 
கனவாகிப் போனவள் நீ
----------------------------------------------
ஒற்றையாய் தீர்பவனின் கோப்பைகள் 
நிறைவதில்லை
..............................................................................

தவிப்பின் வேர்கள் அறுந்து வீழும்வரை 
பிரிதலை சேர்ந்தே நீட்டிபோம் ! 
..................................................
யாரிடமும் வழி கேட்காமலே தொடருகிறது 
உன்விழிப் பயணம் -என் மீதும்
---------------------------------------------------



கொஞ்சம் கண்ணீரும் 
நிறைய புன்னகையுமாக 
நினைவுகளாகினாய்

மனிதம்...

நீரின்றி அமையாது உலகு
மாமழைகாலம் இல்லாமலே போனது
ஆற்றுப் படுகைகள் அழிந்தேப் போனது
கற்குழிகள் வெடி வைத்துக் பொடிக்கப் பட்டது 
வாய்க்காலும் வயக்காடும் காணமல் போனது
குட்டையோ குளமோ கட்டிடங்களாக ..
எங்குதான் தேங்கும் மழைநீர் ?
சிறகடித்து மழைகிழித்திறங்கி மகிழ்ந்த காலங்கள் வரவே வராதா?
வாய்க்காலில் சிலுப்பிச் சிலிர்த்து வெயில் காய்ந்த பொழுதுகள்
அவ்வளவுதானா ?
மனிதம்தான் எத்தனை அசுரமானது ...

முதலும் முற்றுமானள்

முதல் பார்வையிலே எனை முறித்துப் போட்டவள் 
முதலும் முற்றுமானள் -எனக்கு 
k.T

Wednesday, 2 July 2014

மழை ஞாபகம்


மழை - குளத்து மீன்கள் என்ன செய்யும்

மழை - ஆடுகள் அசைபோட்ட பள்ளிக்கூடங்கள்

மழை - அழகாகும் ஜன்னல்கள்

மழை -முதல் நிர்வாண குளியல்

மழை - கப்பல் உருவாக்கிய பிராயங்கள்

மழை - நனைந்து நக்கிய நாய்க்குட்டி

மழை - மௌன சாட்சி ...

மழை -என் வெயில் காலத்தின் தாகம்

மழை - போர்வைக்குள் போராடிய காலங்கள்

மழை - முதல்முறை நனைந்த உன் கூச்சம்

மழை - தாயின் முந்தானை வாசம்

மழை - இதழ் நனைத்த முதல் முத்தம்

மழை - பிரிவின் சாட்சி

மழை - காதலின் முதல் சந்திப்பு

மழை - ஒரு துளி ஹைக்கூ