Saturday, 22 February 2014

செக்கும் - புண்ணாக்கும்


"மன மணம்"

செக்கும் - புண்ணாக்கும் 

காலம் கடத்தி விட்ட விஷயங்களில் செக்கும் ஒன்று .

பழக்கமான மாடுகள் சுற்றி வர ....வெல்லம் கலந்த உடலுக்கு ஏற்ற சுவையான எண்ணைத் தயார் .

அதற்கு எங்கள் வீட்டிலிருந்து அதிகாலையிலே வண்டிகட்டிக்கொண்டு போய்விடுவார்கள் வருவதற்கு பிற்பகல் ஆகிவிடும் 

முதலில் நான் சென்று புண்ணாக்கு பேட்டியில் கை விட்டு கொஞ்சம் அள்ளித் தின்பேன் ( அடியுடன் ) அதன் சுவை வித்தியாசமானது ...

மாடுகள் குடுத்து வைத்தவை என்று நினைத்துகொள்வேன் ...

அனைத்தும் கை மேல் கிடைத்தவுடன், இன்று எல்லாம் கடந்து கொண்டு இருக்கிறது .. போலிகளின் வெளிச்சத்தில் உண்மைகளின் மிச்சம், இருண்டு போவதற்கு காரணம் யாராக இருந்துவிடமுடியும் ??? ஆறாம் அறிவைத் தவிர ..

No comments:

Post a Comment