Saturday, 22 February 2014

கடத்தலான -கடத்தி

திரைப்படங்களும் ,ஊடகத்துறையும் கண்டிப்பாக கலாச்சார கடத்தியாகதான் பார்க்கப்படுகிறது ..
ஆனால் ....

விவேக் ஒரு படத்தில் " என்னடா பெரிய தெலுகு , நாம் பேசுற தமிழுக்கு பின்னால லு லு போட்டுப் பேசுனா அதாண்டா தெலுகு " என்று சொல்வார்
இப்போ தமிழுக்கும் அதே நிலைதான் , 

நாம பேசுற தமிழுக்கு பின்னால " லே லே " போட்டுப் பேசுனா அது நெல்லைதமிழ் 
"அவிங்க இவிங்க " போட்டுப் பேசுனா அது மதுரைத்தமிழ் 
"இல்லிங் சொல்லுங் " போட்டுப் பேசுனா அது கோவைத்தமிழ் 

இப்புடியே போனா அந்த அந்த வட்டார மொழி முற்றிலும் அழிந்து போகும் நிலையே இருக்கும் , ஊடங்கங்கள் , திரைப்படங்கள் கலாச்சார கடத்தியாகதான் இருக்க வேண்டுமே தவிர , கலாச்சாரத்தை கடத்தக்கூடாது ....

No comments:

Post a Comment