Saturday, 2 June 2012


அறியாத மானிடம் 
...............................

பறவையின் சிறகுகளில் 
படிந்து கிடக்கும் 
நெடும் பயணக்கதைகள் ;

புலியின் பாதங்களில் 
பரவிக்கிடக்கும் 
வனத்தின் வாசம் 

சிங்கத்தின் பிடரிக்குள் 
ஒளிந்து கிடக்கும்
உயிர் சூழலின் உண்மை ;

உதிர்ந்து கிடக்கும் இலையில் 
பொதிந்து கிடக்கும் 
பசுமையின் தீராத 
சேதிகள் ;

கடந்து செல்லும் நதியில் 
கரைந்து போகும் 
காடுகளின் பெருங்குரல் ;

எதுவும் புரிவதில்லை 
மானுடத்திற்கு ;
                                                                             - கண்ணன் திருவோணம் 

No comments:

Post a Comment