கருமை பூத்து கிடந்த
ஓர் இரவில்
எனது வெளிச்சத்தை எங்கோ
தொலைத்துவிட்டேன் ;
அள்ளிச்சேர்க்க முனைகையில்
மெதுவாய் தழுவிகொண்டது
இரவின் வாசம்;
நெகிழ்ந்து பரவிய வாசத்தில்
கரும் பூக்களின்
ரகசியம் கண்டேன் ;
கைநீட்டி பறித்துவிட முடியாமல்
தகித்து கொண்டிருந்தது
இரவின் அடர்த்தி ;
மெல்ல மெல்ல ஊர்ந்து ஏறும்
இரவின் வாசத்தை
துடைத்துவிட முடியாமல்
திணறிக் கொண்டிருக்கும் வேளையில் ;
எனது வெளிச்சத்தின் மீது வழிந்துக் கொண்டிருந்தது
இரவு .....
ஓர் இரவில்
எனது வெளிச்சத்தை எங்கோ
தொலைத்துவிட்டேன் ;
அள்ளிச்சேர்க்க முனைகையில்
மெதுவாய் தழுவிகொண்டது
இரவின் வாசம்;
நெகிழ்ந்து பரவிய வாசத்தில்
கரும் பூக்களின்
ரகசியம் கண்டேன் ;
கைநீட்டி பறித்துவிட முடியாமல்
தகித்து கொண்டிருந்தது
இரவின் அடர்த்தி ;
மெல்ல மெல்ல ஊர்ந்து ஏறும்
இரவின் வாசத்தை
துடைத்துவிட முடியாமல்
திணறிக் கொண்டிருக்கும் வேளையில் ;
எனது வெளிச்சத்தின் மீது வழிந்துக் கொண்டிருந்தது
இரவு .....
No comments:
Post a Comment